search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரு தேசம் ஒரே தேர்தல் யோசனை பாராளுமன்ற ஜனநாயகத்தை சேதப்படுத்தும்- ஆம் ஆத்மி
    X

    ஒரு தேசம் ஒரே தேர்தல் யோசனை பாராளுமன்ற ஜனநாயகத்தை சேதப்படுத்தும்- ஆம் ஆத்மி

    • ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே மிச்சமாகும்.

    நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சேதப்படுத்தும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    அது தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க முடியாது, மேலும் கட்சித் தாவல் எதிர்ப்பை தீவிரமாக ஊக்குவிக்கும் என்று ஆம் ஆத்மி கூறியது.

    இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பாராளுமன்ற ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் கூட்டாட்சி அரசியல் ஆகியவற்றின் கருத்தை சேதப்படுத்தும்.

    தொங்கு சட்டசபையை சமாளிக்க முடியாமல், கட்சித் தாவல் எதிர்ப்பு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்கும் நிலைமை இருக்கும். அது தீவிரமாக ஊக்குவிக்கும்.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் செலவு மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே.

    "குறுகிய நிதி ஆதாயங்கள்" மற்றும் நிர்வாக வசதிக்காக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை தியாகம் செய்ய முடியாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×