என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜார்கண்டில் திருமண கோஷ்டியை ஏற்றிச் சென்ற கார் லாரி மீது மோதி 3 பேர் பலி
Byமாலை மலர்3 May 2022 7:51 AM GMT (Updated: 3 May 2022 7:51 AM GMT)
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக சத்பர்வா காவல் நிலைய பொறுப்பாளர் ரிசிகேஷ் ராய் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சத்பர்வா பகுதி அருகே இன்று காலை 6 மணியளவில் மேதினிநகர் - ராஞ்சி சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து சத்பர்வா காவல் நிலைய பொறுப்பாளர் ரிசிகேஷ் ராய் கூறியதாவது:-
ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரில் இருந்து 184 கி.மீ., தொலைவில் உள்ள சத்பர்வா பகுதி அருகே, திருமண விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சோனா சிங் (45), லோக்நாத் சிங் (40), ஜோகேந்தர் சிங் (36) என அடையாளம் காணப்பட்டனர்.
இறந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் ராஞ்சியின் ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் நான்கு பேர் மெதினிராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. யூதர்கள் குறித்து பேசிய ரஷிய மந்திரி: இஸ்ரேல் கடும் கண்டனம்
விபத்து குறித்து சத்பர்வா காவல் நிலைய பொறுப்பாளர் ரிசிகேஷ் ராய் கூறியதாவது:-
ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரில் இருந்து 184 கி.மீ., தொலைவில் உள்ள சத்பர்வா பகுதி அருகே, திருமண விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சோனா சிங் (45), லோக்நாத் சிங் (40), ஜோகேந்தர் சிங் (36) என அடையாளம் காணப்பட்டனர்.
இறந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த இருவர் ராஞ்சியின் ராஜேந்திர மருத்துவ அறிவியல் கழகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும் நான்கு பேர் மெதினிராய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. யூதர்கள் குறித்து பேசிய ரஷிய மந்திரி: இஸ்ரேல் கடும் கண்டனம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X