என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கிவிட்டது - பிரதமர் மோடி பேச்சு
Byமாலை மலர்11 Feb 2022 12:26 PM GMT (Updated: 11 Feb 2022 12:26 PM GMT)
உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
லக்னோ:
உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று நடைபெற்றது. கஸ்கஞ்ச் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பா.ஜ.க. கொடி உயரப் பறக்கிறது. இதனால் போட்டியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
அயோத்தியில் பாரத ரத்னா பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் பிலிம் சிட்டியில் இசைக்காக லதா மங்கேஷ்கர் அகாடமியை அமைத்ததற்காக முதல் மந்திரி யோகியை வாழ்த்துகிறேன்.
எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கி விட்டது. தேர்தல் ஆணையம் மீதும், வாக்குச்சாவடிகள் மீதும் குற்றம் சுமத்தத் தொடங்கி விட்டார்கள்.
உத்தர பிரதேச மக்கள் குண்டர் ராஜ்ஜியத்தை ஏற்க தயாராக இல்லை என்பதே உண்மை என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...கூடங்குளத்தில் அணு உலைக்கழிவுகளை சேமிக்க அனுமதிக்க கூடாது- வைகோ அறிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X