என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
Byமாலை மலர்14 Dec 2021 2:46 AM GMT (Updated: 14 Dec 2021 2:46 AM GMT)
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த குஜராத்தை சேர்ந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9-ம் தேதி நிலைவரப்படி 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா பொறுத்தவரை, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது. தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே ஒமைக்ரான் தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் குஜராத்தில் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநிலம் சூரட் நகராட்சி துணை சுகாதார ஆணையர் டாக்டர் ஆஷிஷ் நாயக் கூறியதாவது:-
கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து டெல்லி வந்த நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஓரிரு நாட்கள் இடைவெளியில் அகமதாபாத்தில் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த இரண்டு சோதனைகளிலும் நெகட்டிவ் வந்துள்ளது.
பிறகு, தொற்று அறிகுறிகள் தெரிந்த நிலையில், மூன்றாவது முறையாக பரிசோதனை செய்ததில் நபருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் சூரட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் கார் டிரைவராக பணியாற்றினேன் - ரஷிய அதிபர் புதின்
இந்தியா பொறுத்தவரை, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது. தொற்று எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே ஒமைக்ரான் தொற்றால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் குஜராத்தில் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து குஜராத் மாநிலம் சூரட் நகராட்சி துணை சுகாதார ஆணையர் டாக்டர் ஆஷிஷ் நாயக் கூறியதாவது:-
கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து டெல்லி வந்த நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் ஓரிரு நாட்கள் இடைவெளியில் அகமதாபாத்தில் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த இரண்டு சோதனைகளிலும் நெகட்டிவ் வந்துள்ளது.
பிறகு, தொற்று அறிகுறிகள் தெரிந்த நிலையில், மூன்றாவது முறையாக பரிசோதனை செய்ததில் நபருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் சூரட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் கார் டிரைவராக பணியாற்றினேன் - ரஷிய அதிபர் புதின்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X