search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித்
    X
    கொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித்

    கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் கைது

    ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை அதிகாரி ஆர்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:
     
    கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் கடந்த 15-ம் தேதி அன்று காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது.

    இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சஞ்சித் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சஞ்சித்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    காரில் வந்து தனது கணவரை கொன்றவர்களை தன்னால் அடையாளம் காண முடியும் என்று சஞ்சித்தின் மனைவி கூறியிருந்தார்.
    சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா என்கிற பயங்கரவாத இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும், "கைது செய்யப்பட்ட நபர், ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் கொலையில் நேரடியாக தொடர்புடையவர்.  மேலும் மூன்று நபர்கள் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று பாலக்காடு காவல் துறை தலைமை அதிகாரி ஆர்.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×