என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுதந்திரம் குறித்து சர்ச்சை பேச்சு - கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற காங்கிரஸ் வலியுறுத்தல்
Byமாலை மலர்11 Nov 2021 10:31 PM GMT (Updated: 11 Nov 2021 10:33 PM GMT)
டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.
புதுடெல்லி:
பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரனாவத் தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என தெரிவித்தார்.
கங்கனா ரனாவத்தின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திரம்குறித்து அவதூறாகப் பேசிய கங்கனா ரனாவத்தின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆனந்த் சர்மா கூறியதாவது:
கங்கனா ரனாவத் 1947ல் கிடைத்த சுதந்திரத்தை அவமரியாதையாகப் பேசியுள்ளார். எனவே, சமீபத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரும்பப் பெற வேண்டும்.
மேலும், இந்த விஷயம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் கலைக்க வேண்டும். அவர் இத்தகைய கருத்துக்களை ஆதரிக்கிறாரா என தெரியப்படுத்த வேண்டும். சுதந்திரத்தை அவமரியாதையாகப் பேசிய கங்கனா ரனாவத் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்...நாடு முழுவதும் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X