என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடு முழுவதும் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை
Byமாலை மலர்11 Nov 2021 8:02 PM GMT (Updated: 11 Nov 2021 8:02 PM GMT)
இந்தியாவில் கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்தது.
கடந்த மாதம் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியது. இந்த சாதனை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்பின் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை நேற்று 110.74 கோடியை தாண்டியது. இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று 48.75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்...மண்டல பூஜைக்காக 15-ந்தேதி நடைதிறப்பு: சபரிமலை செல்ல 340 சிறப்பு பஸ்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X