என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்தார் சுவேந்து அதிகாரி
Byமாலை மலர்12 March 2021 11:13 AM GMT (Updated: 12 March 2021 11:13 AM GMT)
மேற்கு வங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
நந்திகிராம்:
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து அவரது முன்னாள் உதவியாளரும் தற்போது பா.ஜனதாவில் சேர்ந்துள்ளவருமான சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். அவர் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்புகள் போதிய அளவில் இல்லை என்றும், மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்றால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் ஒரு தனியார் நிறுவனமாக மாறி உள்ளது, அங்கு மம்தாவும் அவரது மருமகனும் மட்டும்தான் சுதந்திரமாக பேச முடியும் என்றும் சுவேந்து அதிகாரி விமர்சித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X