என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பூசி மருந்து சப்ளை நாளையுடன் முடிகிறது
Byமாலை மலர்13 Jan 2021 8:33 AM GMT (Updated: 13 Jan 2021 8:33 AM GMT)
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்டு, கோவேக்சின் மருந்துகள் நாளை இரவுக்குள் சப்ளை செய்யப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் ஆகிய 2 மருந்துகளையும் இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில் முதல்கட்டமாக 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு மருந்துகளையும், 55 லட்சம் கோவேக்சின் மருந்துகளையும் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது.
இதையடுத்து நேற்று இரு நிறுவனங்களும் மருந்து சப்ளையை தொடங்கின. புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அதிகாலையில் இருந்தே பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் மூலம் கோவிஷீல்டு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது தொழிற்சாலையில் இருந்து ஐதராபாத் விமான நிலையத்திற்கு மருந்துகளை அனுப்பி வைத்தது. அங்கிருந்து விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
கோவிஷீல்டு மருந்துகள் 13 நகரங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல கோவேக்சின் மருந்துகள் 11 இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீரம் நிறுவனம் இன்று இரவுக்குள் மருந்து சப்ளையை முற்றிலும் முடித்துவிடுவோம் என்று அறிவித்துள்ளது.
அதேபோல பாரத்பயோடெக் நிறுவனமும் மருந்து சப்ளையை விரைவாக முடிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.
நாளை இரவுக்குள் 2 மருந்துகளும் அனைத்து மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய நிலவரப்படி மேற்கு வங்காளத்திற்கு அதிகபட்சமாக மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மாநிலத்திற்கு மட்டும் 10 லட்சம் மருந்துகள் சென்றன.
அதேபோல கர்நாடகாவுக்கு 6 லட்சத்து 70 ஆயிரம் டோஸ் மருந்துகளும், தமிழ்நாட்டுக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம், டெல்லிக்கு 2 லட்சத்து 60 ஆயிரம், ஒடிசாவுக்கு 4 லட்சத்து 10 ஆயிரம், பீகாருக்கு 5 லட்சத்து 50 ஆயிரம், பஞ்சாபுக்கு 2 லட்சம், குஜராத்துக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டோஸ் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானாவுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம், சண்டிகருக்கு 12 ஆயிரம், வடகிழக்கு மாநிலங்களுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீதி மருந்துகளும் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 1 கோடியே 65 லட்சம் டோஸ் மருந்துகள் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட அளவிற்கு தடுப்பூசி போடப்பட்டதும் மீண்டும் மத்திய அரசு மருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளது.
இந்தியாவில் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் ஆகிய 2 மருந்துகளையும் இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதில் முதல்கட்டமாக 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு மருந்துகளையும், 55 லட்சம் கோவேக்சின் மருந்துகளையும் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்தது.
இதையடுத்து நேற்று இரு நிறுவனங்களும் மருந்து சப்ளையை தொடங்கின. புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து அதிகாலையில் இருந்தே பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் மூலம் கோவிஷீல்டு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோல பாரத் பயோடெக் நிறுவனம் தனது தொழிற்சாலையில் இருந்து ஐதராபாத் விமான நிலையத்திற்கு மருந்துகளை அனுப்பி வைத்தது. அங்கிருந்து விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
கோவிஷீல்டு மருந்துகள் 13 நகரங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல கோவேக்சின் மருந்துகள் 11 இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீரம் நிறுவனம் இன்று இரவுக்குள் மருந்து சப்ளையை முற்றிலும் முடித்துவிடுவோம் என்று அறிவித்துள்ளது.
அதேபோல பாரத்பயோடெக் நிறுவனமும் மருந்து சப்ளையை விரைவாக முடிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.
நாளை இரவுக்குள் 2 மருந்துகளும் அனைத்து மாநிலங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய நிலவரப்படி மேற்கு வங்காளத்திற்கு அதிகபட்சமாக மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மாநிலத்திற்கு மட்டும் 10 லட்சம் மருந்துகள் சென்றன.
அதேபோல கர்நாடகாவுக்கு 6 லட்சத்து 70 ஆயிரம் டோஸ் மருந்துகளும், தமிழ்நாட்டுக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம், டெல்லிக்கு 2 லட்சத்து 60 ஆயிரம், ஒடிசாவுக்கு 4 லட்சத்து 10 ஆயிரம், பீகாருக்கு 5 லட்சத்து 50 ஆயிரம், பஞ்சாபுக்கு 2 லட்சம், குஜராத்துக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டோஸ் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானாவுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம், சண்டிகருக்கு 12 ஆயிரம், வடகிழக்கு மாநிலங்களுக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீதி மருந்துகளும் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 1 கோடியே 65 லட்சம் டோஸ் மருந்துகள் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட அளவிற்கு தடுப்பூசி போடப்பட்டதும் மீண்டும் மத்திய அரசு மருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X