search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,90,269 ஆக அதிகரித்துள்ளது.

    அங்கு கொரோனா பாதிப்பால் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,789 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,091 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 5,61,610 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 1,18,851 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×