என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவை இழப்பீடு, ஆறுதல் வார்த்தைகள் அல்ல - ப.சிதம்பரம் கருத்து
Byமாலை மலர்10 Sep 2020 12:26 PM GMT (Updated: 10 Sep 2020 12:26 PM GMT)
ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஜிஎஸ்டி விவகாரத்தில், மாநில அரசுகள் கடன் வாங்க நிர்பந்திக்கப்பட்டால் ஏற்கனவே தூண்டாடப்பட்டுள்ள மாநிலங்களின் மூலதன செலவில் மேலும் துண்டு விழும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய பொருளாதார சூழலில் ஜிஎஸ்டி இழப்பீடு என்பது மாநிலங்களுக்கு உடனடியாக தேவைப்படும் நிதி எனவும், மத்திய அரசு அதற்கான நிதியை திரட்டவும், அதனை வழங்கவும் வேறு பல வளங்களை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்,
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிடும் திட்டங்களும் அறிவிப்புகளும் எந்த மதிப்பும் இல்லாத ஆறுதலான வார்த்தைகளாகவே உள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ரூ. 500 மூலம் இன்றுள்ள நிலையில் குடும்பத்தை நடத்த முடியுமா? என்று மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X