search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    ஒரே நாளில் 1096 பேர் பலி- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 68472 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 1,096 பேர் பலியாகி உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 68472 ஆக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. கடந்த சில தினங்களாக தினசரி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தினசரி நோய்த்தொற்று 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு 39,36,478 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1096 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68472 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,70,492ல் இருந்து 30,37,151 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 66659 பேர் குணமடைந்துள்ளனர். 

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 831124 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.74 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 77.15 சதவீதமாகவும் உள்ளது.

    இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,66,79,145 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11,69,765 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×