என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
உதயன் ராஜே போஸ்லே
யாரையும் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது: உதயன் ராஜே போஸ்லே
By
மாலை மலர்16 Jan 2020 1:54 AM GMT (Updated: 16 Jan 2020 1:54 AM GMT)

பாரதீய ஜனதா வெளியிட்ட ‘இன்றைய சிவாஜி, மோடி’ புத்தகம் தொடர்பாக பேட்டி அளித்த சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியும், தேசியவாத காங்கிரசில் இருந்து பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் எம்.பி. உதயன் ராஜே போஸ்லே, யாரையும் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது என்று கூறினார்.
மும்பை :
பிரதமர் நரேந்திர மோடியை மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு பஞ்சாபை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர் ஜெய் பகவான் கோயல் எழுதியுள்ள ‘ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி' (இன்றைய சிவாஜி நரேந்திர மோடி) என்ற புத்தகத்திற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், அந்த புத்தகத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன.
ஜெய் பகவான் கோயல் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்களான பாரதீய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சத்ரபதி சம்பாஜி ராஜே, சிவேந்திரராஜே போசலே எம்.எல்.ஏ. ஆகியோரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பாக சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியும், தேசியவாத காங்கிரசில் இருந்து பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் எம்.பி. உதயன் ராஜே போஸ்லே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் மறைமுகமாக தாக்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
யாரையும் மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது. அவர் மட்டும் தான் தனது மக்களை பற்றி அனைத்தையும் அறிந்த ஜனதா ராஜா (மக்களின் மன்னர்).
மற்ற யாரையாவது மக்களின் மன்னர் என்று அழைத்தால் அது சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்துவதாகும். எனவே வேறு யாரையாவது மக்களின் மன்னர் என அழைப்பதற்கு முன் சிந்தியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது கட்சியினர் ‘ஜனதா ராஜா' என அழைப்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியை மகாராஷ்டிரா மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு பஞ்சாபை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர் ஜெய் பகவான் கோயல் எழுதியுள்ள ‘ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி' (இன்றைய சிவாஜி நரேந்திர மோடி) என்ற புத்தகத்திற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், அந்த புத்தகத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன.
ஜெய் பகவான் கோயல் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்களான பாரதீய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சத்ரபதி சம்பாஜி ராஜே, சிவேந்திரராஜே போசலே எம்.எல்.ஏ. ஆகியோரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பாக சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியும், தேசியவாத காங்கிரசில் இருந்து பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் எம்.பி. உதயன் ராஜே போஸ்லே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் மறைமுகமாக தாக்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
யாரையும் மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது. அவர் மட்டும் தான் தனது மக்களை பற்றி அனைத்தையும் அறிந்த ஜனதா ராஜா (மக்களின் மன்னர்).
மற்ற யாரையாவது மக்களின் மன்னர் என்று அழைத்தால் அது சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்துவதாகும். எனவே வேறு யாரையாவது மக்களின் மன்னர் என அழைப்பதற்கு முன் சிந்தியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது கட்சியினர் ‘ஜனதா ராஜா' என அழைப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
