search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2ஜி வழக்கில் ஆ.ராசா- கனிமொழிக்கு நோட்டீஸ்
    X

    2ஜி வழக்கில் ஆ.ராசா- கனிமொழிக்கு நோட்டீஸ்

    2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாட்டின் நலன் சார்ந்த வழக்கு என்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை ஜூலை 30-ந்தேதி ஐகோர்ட்டு விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.
    Next Story
    ×