என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உ.பி., அமேதி காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா
Byமாலை மலர்24 May 2019 9:29 AM GMT (Updated: 24 May 2019 9:29 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் ராஜினாமா செய்தார்.
லக்னோ:
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரசேதத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா -62 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்-10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி-5 தொகுதிகளிலும், அப்னாதளம் -2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே காங்கிரஸ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மிக மோசமான இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில தலைவர் ராஜ் பபர் மற்றும் அமேதி மாவட்ட தலைவர் யோகேந்திர மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X