search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்காடு அருகே குடிபோதையில் தகராறு- வாலிபர் அடித்துக்கொலை
    X

    பாலக்காடு அருகே குடிபோதையில் தகராறு- வாலிபர் அடித்துக்கொலை

    பாலக்காடு அருகே குடிபோதையில் தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லடிக்கோடு அருகே உள்ள வாக்கோட்டை சேர்ந்தவர் மேத்யூ ஜோசப் (வயது 41). இவரது மனைவி ஜினா (35). இவர் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    மேத்யூ ஜோசப் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று மேத்யூ ஜோசப் அதே பகுதியில் உள்ள ஒரு பாரில் மது குடித்தார். அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

    இதில் மேத்யூ ஜோசப் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பாலக்காடு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மேத்யூ ஜோசப் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கல்லடிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×