search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைக்கிளுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்தை காட்டியது - சமாஜ்வாடி கட்சி புகார்
    X

    சைக்கிளுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்தை காட்டியது - சமாஜ்வாடி கட்சி புகார்

    உத்தரபிரதேசம் கன்னோஜ் தொகுதியில் சைக்கிளுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்தை காட்டியது என சமாஜ்வாடி கட்சி புகார் செய்துள்ளனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அப்போது 2 வாக்குச்சாவடிகளில் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட்டால் விவிபாட் கருவியில் தாமரை சின்னத்தை காட்டியதாக புகார் எழுந்தது.

    அதோடு இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் பலருக்கு போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓட்டு போட்ட பிறகு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படு மாநில டி.ஜி.பி.யை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கட்சியினர் கூறினர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் அதிகாரியிடமும் புகார் செய்துள்ளனர்.
    Next Story
    ×