search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் கட்டுமான பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்தது- ஒருவர் பலி
    X

    மும்பையில் கட்டுமான பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்தது- ஒருவர் பலி

    மும்பையில் கட்டுமானப் பணியின்போது கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். #MumbaiAccident #BuildingCollapses
    மும்பை:

    மும்பை தாராவியில் உள்ள பிஎம்ஜிபி காலனியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சாலையோரம் நின்றவர்கள், சாலையில் சென்றவர்கள் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தன. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புபடையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.  

    இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “இரவு 10.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர் ஆட்டோ டிரைவர். பைக்கில் சென்ற ஒருவர் பலத்த காயமடைந்தார். அவரை நாங்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்” என்றார். #MumbaiAccident #BuildingCollapses
    Next Story
    ×