என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு- சண்டிகரில் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் போட்டி
    X

    காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு- சண்டிகரில் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் போட்டி

    சண்டிகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #Congress #PawanKumarBansal
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு கட்டமாக வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் நேற்று இரவு 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும், குஜராத்தில் 4 வேட்பாளர்களும், ஜார்க்கண்டில் 3 வேட்பாளர்களும், ஒடிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா 2 வேட்பாளர்களும், இமாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் தலா ஒரு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டனர்.

    இதில் சண்டிகர் தொகுதியில் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன் குமார் பன்சால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியும் முன்னாள் மந்திரியுமான பிரனீத் கவுர் பாட்டியாலா தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி சுபோத் காந்த் சாகே ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் களமிறங்குகிறார்கள்.

    பிரனீத் கவுர்

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரெயில்வே மந்திரியாக இருந்த பவன் குமார் பன்சால், தனது உறவினர் ரெயில்வே பணியிடங்களை நிரப்புவதற்கு லஞ்சம் பெற்றதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Congress #PawanKumarBansal
    Next Story
    ×