என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் வழக்கில் சிறை தண்டனை - லல்லு சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி அறையில் சோதனை
Byமாலை மலர்18 March 2019 6:33 AM GMT (Updated: 18 March 2019 6:33 AM GMT)
லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரி வார்டில் ராஞ்சி சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து சோதனை நடத்தினர். #LaluPrasadYadav
பாட்னா:
பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார்.
இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தற்போது உடல்நல குறைவால் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ் டிடிட் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தனிவார்டில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 நபர்கள் மட்டும் லல்லு பிரசாத் யாதவை ஆஸ்பத்திரி வார்டில் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.
இதில் குடும்ப உறுப்பினர்கள், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். அப்போது பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி தலைவர்கள் பேசுகிறார்கள்.
ஆனால் லல்லு பிரசாத் யாதவின் உடல்நிலை பற்றி விசாரிக்க சென்றதாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரி வார்டில் ராஞ்சி சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து திடீரென்று சோதனை நடத்தினர். இச்சோதனை 30 நிமிட நேரம் நடந்தது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறும்போது, “லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெறும் வார்டில் நடந்த சோதனையில் குற்றத்துக்கான எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை” என்றனர். #LaluPrasadYadav
பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார்.
இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தற்போது உடல்நல குறைவால் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ் டிடிட் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தனிவார்டில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 நபர்கள் மட்டும் லல்லு பிரசாத் யாதவை ஆஸ்பத்திரி வார்டில் சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.
இதில் குடும்ப உறுப்பினர்கள், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். அப்போது பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி தலைவர்கள் பேசுகிறார்கள்.
ஆனால் லல்லு பிரசாத் யாதவின் உடல்நிலை பற்றி விசாரிக்க சென்றதாக கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரி வார்டில் ராஞ்சி சிறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து திடீரென்று சோதனை நடத்தினர். இச்சோதனை 30 நிமிட நேரம் நடந்தது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறும்போது, “லல்லு பிரசாத் யாதவ் சிகிச்சை பெறும் வார்டில் நடந்த சோதனையில் குற்றத்துக்கான எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை” என்றனர். #LaluPrasadYadav
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X