search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது தொடர்பாக கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் புதிய நிபந்தனை
    X

    தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது தொடர்பாக கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் புதிய நிபந்தனை

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 19-ம் தேதி வரை வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. 

    இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன் அரசியல் கட்சிகள் தாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. #LokSabhaElections2019 #ElectionCommission
    Next Story
    ×