என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி
Byமாலை மலர்16 March 2019 9:36 AM GMT (Updated: 16 March 2019 9:36 AM GMT)
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயணிகள் வந்த சொகுசு கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். #JKAccident
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சந்திரகோட்டில் இருந்து ராஜ்கார் பகுதிக்கு இன்று காலை ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. அதில் 14 பேர் பயணம் செய்துள்ளனர். ரம்பான் மாவட்டம் குண்டா மோத் பகுதியைக் கடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த வாகனம், 500 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது.
இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார், மீட்புப்படையினருடன் விரைந்தனர். இவ்விபத்தில் 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3 பேர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #JKAccident
ஜம்மு காஷ்மீரின் சந்திரகோட்டில் இருந்து ராஜ்கார் பகுதிக்கு இன்று காலை ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. அதில் 14 பேர் பயணம் செய்துள்ளனர். ரம்பான் மாவட்டம் குண்டா மோத் பகுதியைக் கடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த வாகனம், 500 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது.
இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார், மீட்புப்படையினருடன் விரைந்தனர். இவ்விபத்தில் 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3 பேர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #JKAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X