search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி
    X

    ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி

    ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயணிகள் வந்த சொகுசு கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். #JKAccident
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சந்திரகோட்டில் இருந்து ராஜ்கார் பகுதிக்கு இன்று காலை ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. அதில் 14 பேர் பயணம் செய்துள்ளனர். ரம்பான் மாவட்டம் குண்டா மோத் பகுதியைக் கடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த வாகனம், 500 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது.

    இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார், மீட்புப்படையினருடன் விரைந்தனர். இவ்விபத்தில் 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேலும் 3 பேர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #JKAccident

    Next Story
    ×