search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபினந்தனை விடுவிப்பது எப்போது?- ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது
    X

    அபினந்தனை விடுவிப்பது எப்போது?- ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது

    இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் விடுவிக்கப்படுவாரா, இல்லையா? என்பது பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கூறியுள்ளது. #Abhinandan #BringBackAbhinandan #PakForeignMinistry
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

    அபினந்தனை விடுவிப்பதற்காக இந்தியா ராஜாங்கரீதியாக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, அபினந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறது.



    இந்நிலையில், அபினந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பாகிஸ்தான் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அபினந்தன் விவகாரம் பற்றி ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்திய பிரதமரிடம் தொலைபேசியில் பேச தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, அபினந்தன் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Abhinandan #BringBackAbhinandan #GenevaConvention #PakForeignMinistry
    Next Story
    ×