search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
    X

    டெல்லியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

    டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடி நரேந்திர மோடி இன்று திறந்து வைத்ததுடன் அணையா ஜோதியையும் ஏற்றி வைத்தார். #NationalWarMemorial #Modidedicates #ModidedicatesWarMemorial
    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைநகரான டெல்லியில் முக்கிய சின்னமாக அமைந்திருப்பது ‘இந்தியா கேட்’ எனும் பிரம்மாண்டமான நுழைவாயில். பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள முக்கிய சாலையான ராஜ்பாத்தில் அமைந்துள்ள இந்த நுழைவாயில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கான  போர் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டது.

    சர் எட்வின் லுத்யான்ஸ் என்பவரால் கட்டப்பட்ட இந்த நினைவிடத்துக்கு அகில இந்திய போர் நினைவுச் சின்னம் என பெயர் வைக்கப்பட்டாலும் அது, இந்தியா கேட் என்றே அழைக்கப்படுகிறது.

    இந்த நுழைவுவாயிலின் தூண்களில் முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த நம் நாட்டின் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ‘அழியாப் புகழ் உடைய போர் வீரர் ஜோதி’ (அமர்ஜவான் ஜோதி) என்ற பெயரில் 1971-ம் ஆண்டு முதல் ஒரு அணையா ஜோதியும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

    இதை விரிவுபடுத்தி, புதுப்பித்து உலக அளவில் ஒரு போர் நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே 1962-ல் நடந்த போருக்குப் பின் கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்த இந்தக் கோரிக்கை, கடந்த 1999-ல் நடந்த கார்கில் போருக்கு பிறகு மேலும் வலுப்பெற்றது.

    இதற்கிடையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் புதுப்பொலிவுடன் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுன்போது பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

    அந்த வாக்குறுதிய நிறைவேற்றும் வகையில் மிக பிரமாண்ட அளவில் இந்த போர் நினைவுச் சின்னம் விரிவுப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவுச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததுடன் அணையா ஜோதியையும் ஏற்றி வைத்தார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான முன்னாள், இந்நாள் ராணுவ உயரதிகாரிகள் இந்த திறப்புவிழாவில் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘டெல்லியில் மாபெரும் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதை மத்தியில் முன்னர் ஆட்சி செய்த அரசு கவனிக்கவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இதற்கான முதல்கட்ட ஏற்பாடுகள் நடந்தன. பின்னர், ஆட்சி மாறியபோது இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

    2014-ம் ஆண்டில் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் இதற்கான பணிகள் தொடங்கி இந்த போர் நினைவுச் சின்னம் இன்று திறக்கப்படுகிறது. இதை புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வரலாற்று சிறப்புக்குரிய இந்த இடத்தில் இருந்தவாறு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு எனது மரியாதைகளை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

    முன்னதாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளுடன் போர் நினைவுச் சின்னத்தில் உள்ள சில வீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைடங்களை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி வீரவணக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியின்போது ராணுவப்படையினருக்காக புதிதாக 3 அதிநவீன சிறப்பு மருத்துவ மனைகள் தொடங்கப்படும் எனவும் மோடி அறிவித்தார். #NationalWarMemorial #Modidedicates #ModidedicatesWarMemorial
    Next Story
    ×