என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
16-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்தது - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Byமாலை மலர்13 Feb 2019 12:28 PM GMT (Updated: 13 Feb 2019 12:28 PM GMT)
2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் கூடிய 16-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. #LokSabhaadjourns #RajyaSabhaadjourns
புதுடெல்லி:
இந்திய பாராளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
16-வது மக்களவையின் இறுதி (இடைக்கால) பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றினர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது.
இன்றைய கூட்டத்தின்போது, கவர்ச்சிகரமான போலி முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், டெல்லியில் 1951ம் ஆண்டு நிறுவப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவகம் நிர்வாகத்தின் நிரந்தர உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி வகிக்க முன்னர் அதிகாரமளிக்கப்பட்டு இருந்தது. இந்த உரிமையை ரத்துசெய்யும் சட்டத்திருத்தமும் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
எனினும், ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கும் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா, இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் மாநிலங்களவையில் முடங்கிக்கிடக்கும் நிலையில் 16-வது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இறுதிநாள் கூட்டத்தின்போது மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய சட்டங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார். இவற்றுக்கெல்லாம் ஆதரவு அளித்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர், தேதி குறிப்பிடாமல் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக இன்று மாலை 5 மணியளவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். முன்னதாக, இன்று பிற்பகல் 2 மணியளவில் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். #LokSabhaadjourns #RajyaSabhaadjourns
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X