search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தாவின் நம்பிக்கைக்கு உரிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஜகவில் இணைந்தார்
    X

    மம்தாவின் நம்பிக்கைக்கு உரிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஜகவில் இணைந்தார்

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான பாரதி கோஷ் பாஜகவில் இணைந்தார். #MamataBanerjee #BharatiGhosh
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமாக இருந்தவர் பாரதி கோஷ்.

    மாவோயிஸ்ட்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதால் இவர் முதல் மந்திரி மம்தாவுக்கு நெருக்கமானார். ஆனால், ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக சிஐடி விசாரணைக்கு ஆளாகி பதவிநீக்கம் செய்யப்பட்டார்.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைவர்கள் முகுல் ராய், கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்  முன்னிலையில் பாரதி கோஷ் பாஜகவில் இணைந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட  அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. #MamataBanerjee #BharatiGhosh
    Next Story
    ×