என் மலர்
செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக தர்ணா - மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து கனிமொழி ஆதரவு
சி.பி.ஐ. அமைப்பை ஏவி எதிர்க்கட்சிகளை மத்திய அரசு பழிவாங்குவதாக கூறி தர்ணா போராட்டம் நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #KanimozhimeetMamata #MamataBanerjeedharna
கொல்கத்தா:
சி.பி.ஐ. அதிகாரிகளை அனுப்பி கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனரை கைது செய்ய முயன்ற சம்பவத்தை மையப்படுத்தி மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்றிரவில் இருந்து மத்திய அரசுக்கு எதிராக நடத்திவரும் ‘ஜனநாயகம் காப்போம்’ போராட்டம் 8-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்றிரவு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். #KanimozhimeetMamata #MamataBanerjeedharna
Next Story






