search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் பெண் எம்.பி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
    X

    காங்கிரஸ் பெண் எம்.பி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. மவுசம் பெனாசிர் நூர் இன்று மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #CongressMP #MausamNoor #TrinamoolCongress
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கடந்த 19-ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 22 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

    இந்த கூட்டத்தால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் முகாமில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக வடநாட்டு ஊடகங்கள் விமர்சித்திருந்தன. 

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி.யான மவுசம் பெனாசிர் நூர் இன்று மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    சட்டம் பயின்ற பட்டதாரியான மவுசம், மேற்கு வங்காளம் மாநிலத்துக்குட்பட்ட சுஜாப்பூர் சட்டசபை தொகுதி பெண் உறுப்பினராக மூன்றுமுறை வெற்றிபெற்ற ருபி நூர் என்பவரின் மகளாவார்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவராக முன்னர் பொறுப்பு வகித்த மவுசம் பெனாசிர் நூர், தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் சுஜாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதன் பின்னர் மல்தாஹா உட்டார் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற மவுசம் பெனாசிர் நூர்(39)  இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #CongressMP #MausamNoor #TrinamoolCongress 
    Next Story
    ×