search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய தேசிய செய்தி தொடர்பாளர்கள் பெயரை அறிவித்தது காங்கிரஸ்
    X

    புதிய தேசிய செய்தி தொடர்பாளர்கள் பெயரை அறிவித்தது காங்கிரஸ்

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக 10 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். #Congress #NationalSpokespersons
    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இருந்து வருகிறார். இவர் தலைமை பொறுப்பு ஏற்றது முதல் கட்சியில் சில மாற்றங்களை செய்து வருகிறார்.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்களாக 10 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பவான் கெரா, ராகினி நாயக், ராஜிவ் தியாகி, அகிலேஷ் பிரதாப் சிங், கவுரவ் வல்லப், ஜெய்வீர் ஷெர்கில் சையத் நசீர் உசைன், ஹீனா கவாரே, ஸ்ரவன் டாசோஜ் மற்றும் சுனில் அஹிரே ஆகியோர் புதிய தேசிய செய்தி தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது. #Congress #NationalSpokespersons
    Next Story
    ×