என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலை விவகாரம்- எதிர்க்கட்சிகள் அமளியால் 8வது நாளாக முடங்கியது கேரள சட்டசபை
Byமாலை மலர்12 Dec 2018 10:23 AM GMT (Updated: 12 Dec 2018 10:23 AM GMT)
சபரிமலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 8-வது நாளாக இன்றும் கேரள சட்டசபையில் பணிகள் முடங்கின. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சபரிமலையில் காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா ஆகியோர் சட்டசபை வாசலில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், 3 எம்எல்ஏக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
அவர்களை அமைதிகாக்கும்படி சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடர்ந்து கூறினார். ஆனாலும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் 8-வது நாளாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
கேரள மாநிலம் சபரிமலையில் காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா ஆகியோர் சட்டசபை வாசலில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் சட்டசபையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சபாநாயகர் தலையிட்டு 3 எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.
இன்றும் சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டனர். சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும், 3 எம்எல்ஏக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
அவர்களை அமைதிகாக்கும்படி சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தொடர்ந்து கூறினார். ஆனாலும் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் 8-வது நாளாக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X