என் மலர்
செய்திகள்

காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம்
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது. #NGT #AirPollution #DelhiGovt
புதுடெல்லி:
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன புகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரமும் குறைந்து வருகிறது.
இதையடுத்து, காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சரியான நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.
டெல்லி அரசு பனியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களிடம் இருந்தும் பணத்தை பிடித்தம் செய்து இந்த தொகையை செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. #NGT #AirPollution #DelhiGovt
நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன புகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்றின் தரமும் குறைந்து வருகிறது.
இதையடுத்து, காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவு எண் ரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீடுகளில் ஊதுவத்தி கொளுத்துவதைக் கூட நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காற்று மாசு குறைந்தபாடில்லை.

இதனால் டெல்லிக்குட்பட்ட பல பகுதிகளில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சரியான நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.
டெல்லி அரசு பனியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்களிடம் இருந்தும் பணத்தை பிடித்தம் செய்து இந்த தொகையை செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. #NGT #AirPollution #DelhiGovt
Next Story






