search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா அரசு முடியும் நாளே உண்மையான தீபாவளி - சந்திரபாபு நாயுடு
    X

    பா.ஜனதா அரசு முடியும் நாளே உண்மையான தீபாவளி - சந்திரபாபு நாயுடு

    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். #ChandrababuNaidu #Diwali #BJP
    அமராவதி:

    ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினார்.

    அதன் பிறகு அவர் பா.ஜனதா அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.



    பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவதி, கெஜ்ரிவால், சரத்யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த நிலையில் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி என்று சந்திர பாபுநாயுடு தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிக மோசமாக செயல்படுகிறது. ஆந்திராவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு ஒரு பைசா கூட நிதி உதவி செய்யாமல் மனித நேயமற்ற தன்மையுடன் இருக்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது. புயலால் பாதித்த மக்களுக்கு நாங்கள உதவி செய்தோம்.

    தற்போது கொண்டாடப்படுவது தீபாவளி அல்ல. மோசமாக ஆட்சியை நடத்தும் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவுக்கு வரும் நாளே உண்மையான தீபாவளி. அந்த தினத்தை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu #Diwali #BJP
    Next Story
    ×