search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆங்கில தொலைக்காட்சி மீது ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு
    X

    ஆங்கில தொலைக்காட்சி மீது ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் கேட்காமல் விவாதத்தை ஒளிபரப்பிய ஆங்கில தொலைக்காட்சி மீது ரூ.10,000 கோடி இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #Rafale #Reliance
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தபின்பும் தொடர்ந்து புகார் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரபேல் ஒப்பந்தத்தில் உதிரி பாகங்கள் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் சிபாரிசு இல்லாமல் ரபேல் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் ‘உண்மையும் மீறலும்’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேசிய பிரபலங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்காமலேயே ஒளிபரப்பப்பட்டதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர் பாக ஆங்கில தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு ஆமதாபாத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். வருகிற 26-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார். #Rafale #Reliance
    Next Story
    ×