என் மலர்

    செய்திகள்

    கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும் - சதானந்தகவுடா
    X

    கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும் - சதானந்தகவுடா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார். #SadanandaGowda
    பெங்களூரு:

    மத்திய மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆயினும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இந்த நிலையில் மந்திரி என்.மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்று நாங்கள் கூறி வருகிறோம். அது கண்டிப்பாக நடக்கும். இந்த ஆட்சியை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

    ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள கட்சி பா.ஜனதா. அதன் அடிப்படையில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும். ஆபரேஷன் தாமரை மூலம் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுப்பதாக கூறுவது தவறு. பா.ஜனதா அத்தகைய முயற்சிைய மேற்கொள்ளவில்லை.

    இவ்வாறு சதானந்தகவுடா கூறினார். #SadanandaGowda

    Next Story
    ×