search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உபி-யில் பட்டினியால் 5 பேர் பலி- எலிக்கறி சாப்பிடும் அவலம்
    X

    உபி-யில் பட்டினியால் 5 பேர் பலி- எலிக்கறி சாப்பிடும் அவலம்

    உத்தரபிரதேச மாநிலத்தில் குஷிநகர் மாவட்டத்தில் 5 பேர் பட்டினியால் பலியாகி உள்ள நிலையில் மக்கள் உணவு கிடைக்காமல் எலிக்கறியை உணவாக சாப்பிடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. #RatEating #UP #yogiAdityanath
    குஷிநகர்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது

    கடந்த மாதம் அம்மாநில அரசு தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடிய நிலையில் 5 பேர் பட்டினியால் பலியான பரிதாப தகவல் வெளியாகி உள்ளது.

    அங்குள்ள குஷிநகர் மாவட்டத்தில் ‘முஷாகர்ஸ்’ எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் தான் வறுமை காரணமாக கடந்த மாதம் பட்டினியால் இறந்து உள்ளனர். சோன்வா தேவி என்பவரின் இரண்டு மகன்கள் பட்டினியால் பலியாகி உள்ளனர். சகோதரர்களான அவர்களுக்கு 22 மற்றும் 16 வயது ஆகிறது.

    இதேபோல மேலும் 3 பேரும் பட்டினியால் இறந்துள்ளனர்.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதன் காரணமாக எலிக்கறியை உணவாக சாப்பிடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் ‘முஷாகர்ஸ்’ இன மக்கள் 2.6 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இதில் 97 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்கிறார்கள்

    இதற்கிடையே பட்டினி சாவை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-



    பசியால் 2 சகோதரர்கள் சாகவில்லை. அவர்கள் காச நோயால் இறந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்படும்

    முஷாகர்ஸ் இனமக்களுக்கு எங்களது அரசு வேலை மற்றும் வீடுகள் வழங்கி உள்ளது. அந்த குடும்பத்தினருக்கு ரேசன் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார். #RatEating #UP #yogiAdityanath
    Next Story
    ×