search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் கட்டாயமா? இல்லையா? - 27 பேர் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்
    X

    ஆதார் கட்டாயமா? இல்லையா? - 27 பேர் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்

    அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. #Aadhaar #DipakMishra
    புதுடெல்லி:

    வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது. இதனை எதிர்த்து 27 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

    அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. மேலும், நீதிமன்ற வழக்குகளை நேரலையாக காண வழிவகை செய்ய வேண்டும் என்ற பொதுநல வழக்கு மீதும் நாளை தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது. 
    Next Story
    ×