என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரசு பணத்தை விளம்பரத்துக்கு செலவழிப்பதா? பா.ஜ.க.வுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
புதுடெல்லி:
ஆம் ஆத்மி கட்சி எம்.எல். ஏ. சஞ்சீவ்ஷா டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் அவர், “பாரதிய ஜனதா கட்சியும், பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் அரசுப் பொது பணத்தை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. அரசு பணத்தை எடுத்து கட்சி வளர்ச்சிக்கும், பிரசாரத்துக்கும் பயன்படுத்துகிறார்கள்.” என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி,” எந்தெந்த மாநிலங்களில் பணம் தவறாக செலவிடப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க் கண்ட் மாநிலங்களில் அரசு பணம் தவறாக செலவிடப்படுகிறது என்று கூறினார். அரசு விளம்பரங்களில் விதிமுறைகள் மீறப்பட்ட தாகவும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அரசு பணத்தை விளம்பரம் செய்ய தவறாக பயன்படுத்தினீர்களா என்று பா.ஜ.க. வுக்கு நீதிபதி கேள்வி விடுத்துள்ளார். இது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதில்அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்களில் உள்ள பா.ஜ,க. அரசும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்