search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் விரட்டியடிப்பு
    X

    எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினர் விரட்டியடிப்பு

    ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய படையினர் விரட்டியடித்தனர். #PakistanTroopsViolate
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு ஊடுருவ முயற்சித்தனர்.

    இதைக்கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அவர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினரின் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டது.

    இதேபோல், நேற்று முன்தினம் இரவு குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்திய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து, எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #PakistanTroopsViolate
    Next Story
    ×