search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வறுமையால் வாழ்விழந்த குடும்பம் - 2 கைக்குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை
    X

    வறுமையால் வாழ்விழந்த குடும்பம் - 2 கைக்குழந்தைகள் உட்பட 7 பேர் தற்கொலை

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2 கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 7 பேர் தங்களது வீட்டிலேயே தூக்கிட்டு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Ranchi #Jharkhand #Sucide
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் அர்சாண்டே. இந்த கிராமத்தில் வாழும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தூக்கிட்டு இறந்ததாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து காலை 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

    அங்கு 2 கைக்குழந்தைகள் உட்பட 7 பேர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதையடுத்து, அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



    அந்த குடும்பத்தினர் வறுமையில் வாடியதாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வறுமையின் காரணமாக 2 கைக்குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தினர் 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Ranchi #Jharkhand #Sucide
    Next Story
    ×