search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்க்கண்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
    X

    ஜார்க்கண்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Encounter
    தும்கா:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    இந்த என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Encounter 
    Next Story
    ×