search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடாளுமன்றத்தில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதா நிறைவேறியது
    X

    நாடாளுமன்றத்தில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதா நிறைவேறியது

    நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. #HumanTrafficking #LokSabha
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், ‘ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதும், கடத்தல்காரர்களை தண்டிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.

    ஆள் கடத்தலை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணிக்காக சிறப்பு அதிகாரியை நியமிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.



    ஆண், பெண் இருபாலருக்கு மட்டுமின்றி, வெளிநாட்டினருக்கும் இம்மசோதா பொருந்தும் என்று விவாதத்துக்கு பதில் அளித்தபோது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார். மனிதர்களை வாங்குவதும், விற்பதும் முதல்முறையாக குற்றம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். #HumanTrafficking #LokSabha #tamilnews 
    Next Story
    ×