search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் மாடு கடத்தியதாக கருதி 4 பேரை கொல்ல முயற்சி
    X

    உ.பி.யில் மாடு கடத்தியதாக கருதி 4 பேரை கொல்ல முயற்சி

    உத்தரப்பிரதேசத்தில் மாட்டை கடத்தி செல்வதாக கருதி 4 பேரை கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து தாக்கியபோது போலீசார் உடனடியாக விரைந்ததால் அவர்கள் உயிர் தப்பினர்.
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் புர்தில் நாகர் பகுதியில் நாக்ல மண்டாதி கிராமத்தில் அடிக்கடி மாடுகள் திருட்டு போனது. இதனால் உள்ளூர் மக்கள் விழிப்புடன் இருந்து கண்காணித்தனர்.

    இந்த நிலையில் இந்த கிராமத்தின் அருகே ஹத் ராஸ் என்ற இடத்தில் இறந்த எருமை மாட்டை 4 பேர் சேர்ந்து ஒரு வேனில் ஏற்றிச் சென்றனர். இதை அறிந்த கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மாட்டை திருடி அடித்துக் கொன்று விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக கருதி 4 பேரையும் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்றனர். 4 பேரையும் மீட்க முயன்றபோது கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்துவதாகவும், அதில் மாடு திருடர்கள் என தெரிய வந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து 4 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த 4 பேரில் 2 பேர் முஸ்லிம்கள், 2 பேர் இந்துக்கள்.

    தக்க சமயத்தில் போலீசார் சென்றதால் 4 பேரும் கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்கள் மாடு திருடர்களா? என விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×