search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் பாஜக தலைமை கொறடாவாக நியமனம்
    X

    பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் பாஜக தலைமை கொறடாவாக நியமனம்

    பிசிசிஐ முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான அனுராக் தாகூர் மக்களவை பாஜக தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். #AnuragThakur #BJP #MansoonSession #LokSabha
    புதுடெல்லி:

    இமாச்சலப்பிரதேசம் ஹிமாபுர் தொகுதி எம்.பி.யாக உள்ள அனுராக் தாகூர் பாஜகவின் இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த அவர் சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பாஜகவின் தலைமை கொறடாவாக அனுராக் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமை கொறடாவாக இருந்த ராகேஷ் சிங் மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் பதவியில் இருந்து விலகினார். 

    ஒரு கட்சியின் கொறடாவின் உத்தரவுக்கு ஏற்ப அக்கட்சி எம்பிக்கள் அவையில் செயல்பட முடியும். கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் உறுப்பினர்களின் பதவியை பறிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×