search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் சங்க ஊழல் - காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
    X

    கிரிக்கெட் சங்க ஊழல் - காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீது சி.பி.ஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. #JammuKashmir #FarookAbdullah #CBI
    ஸ்ரீநகர்:

    ஐம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் சுமார் 113 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் குறித்து உள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு முதல் விசாரித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மஜித் யாகூப் தார், நிசார் அகமது கான் ஆகியோர் ஐம்மு காஷ்மீர் ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பால் வசந்தகுமார், நீதிபதி பன்சிலால் பத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.



    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ, ஸ்ரீநகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லா உட்பட 4 பேர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. #JammuKashmir #FarookAbdullah #CBI
    Next Story
    ×