search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் - பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம்
    X

    தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் - பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம்

    அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் நொய்டாவுக்கு பயணம் மேற்கொண்டனர். #SouthKorea #PMModi
    புதுடெல்லி:

    தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் 5 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். இன்று மத்திய மந்திரி சுரேஷ் பிரபு மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதனை அடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாம்சங் செல்போன் உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மூன் ஜே-இன் ஆகிய இருவரும் டெல்லி மெட்ரோ ரெயிலில் ஒன்றாக நொய்டா சென்றடைந்தனர். 
    Next Story
    ×