என் மலர்
செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் போலீஸ் அதிகாரி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். #MilitantsAttack #JKfiring #SPOshot
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தின் கத்தோ ஹலன் பகுதியில் இன்று மாலை சிறப்பு போலீஸ் அதிகாரி ரவீஸ் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்சிபோரா காவல் நிலையம் மீது சில பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #MilitantsAttack #JKfiring #SPOshot
Next Story






