என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரைவிங் லைசென்சையும் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு முடிவு
Byமாலை மலர்13 Jun 2018 5:13 AM GMT (Updated: 13 Jun 2018 5:13 AM GMT)
நாட்டில் ஆதார் கார்டுடன், முக்கிய சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக டிரைவிங் லைசென்சையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #AadhaarCard #License
டேராடூன்:
மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று டேராடூனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்தில் வழிபாடுகள் செய்வதற்காக வந்தேன். நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்று நான் வழிபாடு செய்தேன்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆர்.எஸ்.எஸ். பற்றி தொடர்ந்து தவறான தகவல்களை சொல்லி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரது தந்தை, பாட்டி, பெரிய தாத்தா எல்லாரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அவமதித்தனர். ஆனால் இன்று அந்த இயக்கம் மறுமலர்ச்சி பெற்றுள்ளது.
நாட்டில் ஆதார் கார்டுடன், முக்கிய சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக டிரைவிங் லைசென்சையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நான் மத்திய போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியுடன் பேசி ஆலோசித்து வருகிறேன். எனவே விரைவில் ஆதாருடன் டிரைவிங் லைசென்சையும் இணைக்கும் பணி தொடங்கும்.
ஆதார் அட்டையுடன் டிரைவிங் லைசென்சை இணைப்பதன் மூலம் தவறு செய்யும் வாகன ஓட்டிகள் யாரும் தப்ப முடியாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகி மக்களை கொன்று விட்டு வேறு மாநிலத்துக்கு சென்று தப்பி விடுகிறார்கள்.
வேறு வேறு பெயர்களில் உள்ள டிரைவிங் லைசென்சு மூலம் தப்பி விடுகிறார்கள். ஆதாருடன் டிரைவிங் லைசென்சை இணைத்து விட்டால், அத்தகைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது.
தவறு செய்யும் வாகன ஓட்டிகள் தங்கள் பெயரை மாற்றலாம். ஆனால் ஒரு போதும் தங்கள் கைரேகையை மாற்ற இயலாது.
இவ்வாறு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #AadhaarCard #License
மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று டேராடூனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்தில் வழிபாடுகள் செய்வதற்காக வந்தேன். நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்று நான் வழிபாடு செய்தேன்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆர்.எஸ்.எஸ். பற்றி தொடர்ந்து தவறான தகவல்களை சொல்லி வருகிறார். அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரது தந்தை, பாட்டி, பெரிய தாத்தா எல்லாரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை அவமதித்தனர். ஆனால் இன்று அந்த இயக்கம் மறுமலர்ச்சி பெற்றுள்ளது.
நாட்டில் ஆதார் கார்டுடன், முக்கிய சேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு வருகிறது. அடுத்தக் கட்டமாக டிரைவிங் லைசென்சையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நான் மத்திய போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரியுடன் பேசி ஆலோசித்து வருகிறேன். எனவே விரைவில் ஆதாருடன் டிரைவிங் லைசென்சையும் இணைக்கும் பணி தொடங்கும்.
ஆதார் அட்டையுடன் டிரைவிங் லைசென்சை இணைப்பதன் மூலம் தவறு செய்யும் வாகன ஓட்டிகள் யாரும் தப்ப முடியாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகி மக்களை கொன்று விட்டு வேறு மாநிலத்துக்கு சென்று தப்பி விடுகிறார்கள்.
வேறு வேறு பெயர்களில் உள்ள டிரைவிங் லைசென்சு மூலம் தப்பி விடுகிறார்கள். ஆதாருடன் டிரைவிங் லைசென்சை இணைத்து விட்டால், அத்தகைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது.
தவறு செய்யும் வாகன ஓட்டிகள் தங்கள் பெயரை மாற்றலாம். ஆனால் ஒரு போதும் தங்கள் கைரேகையை மாற்ற இயலாது.
இவ்வாறு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #AadhaarCard #License
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X