என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு- ரோடு ஷோவுக்கு தடை
Byமாலை மலர்9 Jun 2018 9:23 AM GMT (Updated: 9 Jun 2018 9:23 AM GMT)
மாவோயிஸ்டுகள் கொலை மிரட்டலைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரோடு ஷோக்கள் செல்ல வேண்டாம் என்று பிரதமருக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். #PMModi
புதுடெல்லி:
பிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கைதான மாவோயிஸ்டிடம் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை செயலக அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீர்கள் (எஸ்.பி.ஜி.) மற்றும் நெருக்கமான பாதுகாப்பு படை வீரர்கள் (சி.பி.ஜி.) ஆகியோர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். மாவோயிஸ்டுகள் மிரட்டலைத் தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பிரதமரின் பாதுகாப்பு படையில் அதிவிரைவில் குறி பார்த்து சுடும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த தாக்குதலையும் முறியடிக்க கூடிய திறன் படைத்தவர்கள்.
மேலும் பிரதமர் மோடி பொது இடங்களுக்கு செல்லும்போது திடீர் என்று பாதுகாப்பை மீறி ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்திக்கிறார். சமீப காலமாக பிரதமர் மோடி இவ்வாறு பல ரோடு ஷோக்கள் சென்றுள்ளார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை அடைந்தனர்.
இதுபோல் திடீர் ரோடு ஷோக்கள் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கண்டுபிடிக்க கூடிய நவீன கருவிகளும் பிரதமர் பாதுகாப்பில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. #PMModi
பிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கைதான மாவோயிஸ்டிடம் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை செயலக அதிகாரிகள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீர்கள் (எஸ்.பி.ஜி.) மற்றும் நெருக்கமான பாதுகாப்பு படை வீரர்கள் (சி.பி.ஜி.) ஆகியோர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். மாவோயிஸ்டுகள் மிரட்டலைத் தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பிரதமரின் பாதுகாப்பு படையில் அதிவிரைவில் குறி பார்த்து சுடும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எந்த தாக்குதலையும் முறியடிக்க கூடிய திறன் படைத்தவர்கள்.
எதிரி துப்பாக்கியை எடுத்து குறி பார்க்கும் முன் இவர்கள் அவனை வீழ்த்தி விடுவார்கள். அந்த அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
கோப்புப்படம்
மேலும் பிரதமர் மோடி பொது இடங்களுக்கு செல்லும்போது திடீர் என்று பாதுகாப்பை மீறி ‘ரோடு ஷோ’ சென்று பொதுமக்களை சந்திக்கிறார். சமீப காலமாக பிரதமர் மோடி இவ்வாறு பல ரோடு ஷோக்கள் சென்றுள்ளார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை அடைந்தனர்.
இதுபோல் திடீர் ரோடு ஷோக்கள் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கண்டுபிடிக்க கூடிய நவீன கருவிகளும் பிரதமர் பாதுகாப்பில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. #PMModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X