search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மோடி
    X

    முக்திநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மோடி

    நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, இன்று காலை புகழ்மிக்க முக்திநாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். #ModiVisitNepal #ModiPrayersMuktinath
    காத்மாண்டு:

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று நேபாளம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜனக்பூர் சென்றடைந்த அவர், ஜனக்பூர் விமான நிலையத்தில் இருந்து ஜானகி கோவிலுக்கு சென்றார். அப்போது அவரை நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின்னர் ஜனக்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



    இந்நிலையில், இரண்டாம் நாள் சுற்றுப்பயணத்தில் இன்று காலை புகழ்பெற்ற முக்திநாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அமர்ந்து சிறிது நேரம் பிரார்த்தனையும் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களையும் மோடி சந்தித்து பேசினார். மோடியின் வருகையையொட்டி கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    அதன்பின்னர் காத்மாண்டு திரும்பும் மோடி, பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளார். இதையடுத்து பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். #ModiVisitNepal #ModiPrayersMuktinath
    Next Story
    ×