என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை
By
மாலை மலர்24 Nov 2017 9:12 PM GMT (Updated: 24 Nov 2017 9:12 PM GMT)

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் மகனான தேஜ் பிரசாத் யாதவ் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாரதி ஜனதா பிரமுகர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா:
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர், நிதிஷ் குமார் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர். இவர், பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்-மந்திரி சுசில் குமார் மோடிக்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் விடுத்தார்.
‘சுசில் குமார் மோடியின் மகன் திருமணம் டிசம்பர் 3-ந் தேதி நடக்கும்போது, சுசில் குமார் மோடியின் வீடு புகுந்து அவரை அடிப்போம்’ என்று அவர் கூறினார். இந்த பேச்சு, வீடியோ வடிவில் வைரலாக பரவியது. இதற்கு பதிலடியாக, பாட்னா மாவட்ட பா.ஜனதா ஊடக பொறுப்பாளர் அனில் சானி, ‘தேஜ் பிரதாப் யாதவை கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். அவர் மன்னிப்பு கேட்கக்கோரி, அவரது வீடு முன்பு போராட்டம் நடத்துவோம்’ என்று கூறினார்.
அனில் சானியின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பா.ஜனதா அறிவித்துள்ளது.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர், நிதிஷ் குமார் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர். இவர், பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்-மந்திரி சுசில் குமார் மோடிக்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் விடுத்தார்.
‘சுசில் குமார் மோடியின் மகன் திருமணம் டிசம்பர் 3-ந் தேதி நடக்கும்போது, சுசில் குமார் மோடியின் வீடு புகுந்து அவரை அடிப்போம்’ என்று அவர் கூறினார். இந்த பேச்சு, வீடியோ வடிவில் வைரலாக பரவியது. இதற்கு பதிலடியாக, பாட்னா மாவட்ட பா.ஜனதா ஊடக பொறுப்பாளர் அனில் சானி, ‘தேஜ் பிரதாப் யாதவை கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். அவர் மன்னிப்பு கேட்கக்கோரி, அவரது வீடு முன்பு போராட்டம் நடத்துவோம்’ என்று கூறினார்.
அனில் சானியின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பா.ஜனதா அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
